ஞாயிறு, 1 மே, 2011





4. நெய்தல் - தலைமகள் கூற்று

நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்தநங் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே. 
-காமஞ்சேர் குளத்தார்

நோம் என் நெஞ்சே -வருந்தாதே மனமே ,கண்ணீர் தாங்கி -கண்ணீரை துடைக்க ,அமைவிலர்-அருகில் இல்லாதவர் 




வருந்தாதே மனமே ,என்னவர் அருகில் இல்லாத துன்பத்தால் ,என் கண்ணையே தீய்துவிடும் வெப்பமுள்ள கண்ணீரானதுவழிகிறது .அந்த கண்ணீரை துடைப்பதற்கு உரிய என் காதலன் என் அருகில் இல்லையே ,வருந்தாதே மனமே 

கருத்துகள் இல்லை: