செவ்வாய், 17 மே, 2011

குறுந்தொகை பாடல்-8






8. மருதம் - காதற் பரத்தை கூற்று

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே. 
-ஆலங்குடி வங்கனார்.

கழனி-சேறும் சகதியுமான வயல்,மாஅத்து-மாமரத்து,உகு-உதிரும்,தூஉம்-கவ்வும்,எம்இல்-எனது வீடு,தம்இல்-அவன் வீடு,பெருமொழி-புகழ்மொழி,பாவை-பொம்மை,மேவன-விரும்பிய,தன் புதல்வன் தாய்-தனது மனைவி 


வயல் அருகில் உள்ள மாமரத்திலிருந்து கனிந்து வீழ்கிற மாம்பழத்தை பொய்கையில் உள்ள வாளை மீன்கள் கவ்வி உண்ணும்.அப்படிப்பட்ட ஊரை உடைய தலைவன்,என்னை வயப்படுத்துவதற்காக என்னை பற்றி புகழ்வான்.தன்னுடைய வீட்டில் மட்டும் கண்ணாடி முன்பு நின்று கையும் காலையும் தூக்கினால் கண்ணாடியில் உள்ள பிம்ப பாவையும் தூக்கும்,அதுபோல அவன் மனைவி சொல்வதற்கெல்லாம் விரும்பி செய்வான் 

நம்ம தலைவரு கீப்,அதாங்க சின்ன வீடு வச்சி இருக்காரு.வீட்டுகார அம்மாவுக்கு தெரிஞ்சிபோச்சு,என்ன பண்ணுவாங்க,எப்பயுமே தப்பு பண்ணுனவங்கள விட்டுருவாங்க,அப்படிதான் இந்த அம்மாவும் என் வீட்டுக்காரு நல்லவருதான்.,அவதான் இவர மயக்கிட்டா அப்படின்னாங்க ,இது சின்னவீட்டுக்கு காதுல விழுந்ததுதான்,வந்தது பாருங்க கோவம்".உன் வீட்டுக்காரன் மாம்பழம் வயல்ல வந்து விழுந்த மாதிரி என்னட்ட வந்ததும் இல்லாம யோக்கியன் மாதிரி நீ சொல்றதுக்குகெல்லாம் பொம்மை மாதிரி தலையாட்டுறான்",அப்படின்னு திட்டுறா 


                                                          மாம்பழம்  
                                                         
                                                             வாளை மீன் 
                                                கண்ணாடியில் பிம்பம் 


கருத்துகள் இல்லை: