வெள்ளி, 29 ஏப்ரல், 2011

குறுந்தொகை பாடல் 3



குறுஞ்சி பூ 



3. குறிஞ்சி - தலைவி கூற்று

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. 
-தேவகுலத்தா

தேவகுலம்-கோவில்,நீர்-கடல்,கருங்கோல்-கருமை நிறம் உடைய குறிஞ்சி பூவினுடைய காம்பு ,நாடன்-குறிஞ்சி நாட்டின் தலைவன் 
ஆரள்-ஆழம்

நம்ம பொண்ணு திருட்டுதனமா காதல் பண்றாங்க .அதை பார்த்த தோழி இப்படி திருட்டுதனமா பண்ணாத,அவன் லவ் பண்றன்னு ஏமாத்திட்டு போய்டுவான் அப்படின்னு திட்டுறாங்க.நம்ம பசங்களுக்கு அப்ப என்ன சொன்னாலும் ஏறாது .என்ன சொல்லுது பாருங்க 

எங்க காதல் நிலத்தை விட பெரிது,வானத்தை விட உயர்ந்தது ,கடலை விட ஆழமானது .கறுப்புநிற கொம்புல பூத்திருக்கின்ற குறிஞ்சி பூவில் உள்ள தேனை மட்டுமே சேகரிக்கும் என் தலைவன் நாட்டு தேன் ஈக்கள்
அதனால என் ஆளும் என்ன மட்டும் தான் காதல் பண்ணுவான்.நீ ஒன்னும் எனக்கு  அறிவுரை சொல்ல வேண்டாம் 

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

குறுந்தொகை பாடல் 2




2. குறிஞ்சி - தலைவன் கூற்று

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே. 
-இறையனார்.

கொங்கு -தேன்
தேர் ------தேடுதல் 
அஞ்சிறைத்தும்பி-உடலோடு சிறகை உடைய வண்டு 
காமம் செப்பாது -முக நட்பபிற்காக சொல்லாது 
மொழி-சொல்லு 
பயிலியது -பயின்றது 
கெழிய-உரிமை உடைய 
மயிலியல் -மயில் போன்ற 
செரியெயிற்று --வரிசையான பற்களை உடைய 
அரிவை-பெண் 
நறிய-மிகுந்த மணம் உடைய  

இந்த பாட்டு எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குதா.நம்ம சிவாஜி பாட்டு எழுதி கொடுப்பாரு பாருங்க நம்ம நாகேஷ்க்கு திருவிளையாடல் படத்துல.அந்த பாட்டு தாங்க .

அதாவது காதல் பண்றவங்களுக்கு தன்னோட காதலி மட்டுமே உயர்ந்தவளாக தெரியும்.அப்படித்தான் அவரோட காதலியோட கூந்தல் மணத்தை விட எந்த பூவிலாவது அதிக மணம் உள்ளதா என கேட்கிறார் 


தேனை தேடி வாழ்கைநடத்துகிற வண்டே!எனது முகத்தை பார்தத்ற்காக சொல்லாதே .கண்டதை மட்டும் சொல்லு .என்னோடு பயிலகூடிய நட்பையும் உரிமையும் ,வரிசையான பற்களையும் உடைய இந்த பெண்ணின் கூந்தலின் மணத்தை விட அதிகம் உள்ள பூக்களை எங்கேயும் பார்த்ததுண்டோ ?

வியாழன், 21 ஏப்ரல், 2011

குறுந்தொகை பாடல் 1

குறுந்தொகை பாடல் 1

திணை -குறிஞ்சி ,இடம்-மழையும் மலை சார்ந்த இடமும் ,காலம்-கூதிர் ,பொழுது-யாமம் ,கடவுள்-முருகன்-தினை,நெல் விலங்கு-யானை,புலி,பன்றி,கரடி,  பறவை-மெயில்,கிளி, மரம-வேங்கை,கோங்கு பறை-வெறியாட்டு பறை ,தொண்டக பறை , தொழில்-தேன் எடுத்தல் ,பண்-குறிஞ்சி பண்,பூ-காந்தள்,வேங்கை,குறிஞ்சி ,நீர்-சுனை நீர்,அருவி நீர் ,உரிபொருள்-புணர்தலும் புணர்தல் நிமித்தமும் 

காந்தள்,கர்ர்திகை,கண்வள்ளி பூ 




1. குறிஞ்சி - தோழி கூற்று

செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே. 
-திப்புத் தோளார்.

செங்களம்-போரினால் போர்க்களம் இரத்ததால் சிவப்புபாக உள்ளது ,தோய்ந்த-கறைபட்ட .கோட்டி-தந்தம்,கொம்பு ,கழல் -தண்டை ,கால் வளையம் ,


இரத்த போர் களத்தையும்,இரத்த கறைபட்ட அம்பினையும் ,பகைவர்களை  குத்தி கொன்றதால் இரத்த கறைபட்ட  தந்தங்களை கொண்ட யானைகளையும் ,காலில் வீர கழல்கலையும் அணிந்த முருகனது குன்றம் .மேலும் இரத்தம் போன்ற நிறைந்த காந்தள் பூ குலைகளை கொண்டது


நம்ம பசங்க இப்ப ரோஜாபூ கொடுத்து ஐ லவ் யூ சொல்லற மாதிரி அந்த காலத்துல நம்ம ஆளு கார்த்திகை பூ ஒன்னு மட்டும்  கொடுத்து இருக்காரு,அதுவும் நேரா கொடுக்காம ஆளோட பிரண்ட்கிட்ட குடுத்து கொடுக்க சொல்றாரு .ஆனா அந்த வால்புடிச்சி சொல்லுது(மேலே உள்ள உரையை சேர்த்து கொள்ளவும்). எங்க ஊரே சிவப்பு கலர்தான் .இந்த ஒரு பூ எதுக்கு

புதன், 20 ஏப்ரல், 2011

குறுந்தொகை 
குறுந்தொகை எட்டு தொகை நூல்களில் ஒன்று .கவிதை தோன்றிய காலத்தில் புலவர்கள் சிறுசிறு வரிகளால் எழுதினர் .அப்படி பாடப்பட்ட பாடல்கள் இரண்டாயிரத்து நானூற்று இருபத்து ஆறு (2426).அவைதான் எட்டு தொகை நூல்கள்.அவை பொருளையும் பா வகையும் அடி அளவையும் கொண்டு நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு,அகநானூறு,புறநானூறு ,பதிற்றுப்பத்து.பரிபாடல் ,கலித்தொகை ஆகும்

நான்கடி முதல் எட்டு அடிவரை உடையது, குறுந்தொகை 205 புலவர்களால் பாடப்பட்டது .தொகுத்தவர் உப்ப்பூரி குடி கிழார் ,மொத்தம் 401 பாடல்கள் குறுந்தொகையில் உள்ளது.

குறுந்தொகையில் உள்ள பாடல்கள் அனைத்திற்கும் இந்த வலை பூவில் விளக்கத்துடன எழுதலாம் என்று  தமிழ் காதலுடன் உள்ளேன்.தவறுகள் இருந்தால் தமிழ் பெரியோர்கள் மன்னித்து தவறுகளை சுட்டி காட்டவும்  

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

தமிழ் வாழ்க

முதன் முதலாக எ னக்கு தெரிந்த தமிழை இந்த  வலை பூவில் பகிர்ந்து
கொள்கிறேன்


காதலால்தான்  உலகில்  எல்லாம் நடக்கிறது .அப்படி பட்ட ஒரு காதல்  வயப்பட்ட ஆண் தன் காதலை எப்படி கூறுகிறான் என்பதை சங்க கால பாடல் ஒன்றை பாருங்கள் .



சுனைப்பூ குற்று தொடலை தை இப்
புனக்கிளி கடியும் பூங்கண் பேதை
தான் அறிந்த்ளனோ? இலளோ?பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து என்
உள்ளம் பி ன்னும் த ன்னுழை யதுவே
                                                        -  
குற்று-பறித்து ,தொடலை -மாலை  தைஇ- செய்து,பா னாள்-நள்ளிரவு ,பள்ளி - ப டு க்கை ,உழை -இடம்

சுனையில் பூத்த பூக்களை பறித்து மாலையாக கழுத்தில் சூடி கொண்டு திணை புனத்தில் கிளி விரட்டும் பூ போன்ற கண்களை உடைய பேதை பெண் அவள் அறிந்தா ளோ?இல்லையோ? அவள் மீது நான் கொண்ட காதலால் நள்ளிரவில் கூட நான் தூங்குவதில்லை .தூங்கும் யானையின் பெரு மூச்சுபோல் மூச்சு விடுகிறேன்,என் உள்ளம அவளிடமே  உள்ளது