சனி, 28 மே, 2011

குறுந்தொகை பாடல் 11,12









12. பாலை - தலைவி கூற்று

எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறிக்
கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத் தென்பவர் தேர் சென்ற ஆறே
அதுமற் றவலங் கொள்ளாது
நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே. 
-ஓதலாந்தையார்.

எயினர் -வேடர்,பகழி-அம்பு,மாய்க்கும்-கூர் தீட்டும் ,நொதுமல் கழலும்-இளக்காரமான சொற்களை கூறும்,குறும்பல் சுனை-குறுகிய சுனை (மலையில் வடியும் சிறிய நீர் ஓடை),எறும்பி-எறும்பு,உலைக்கல்-வெப்பமான கல்,


                                                       எறும்பு புற்று 


                                                

                                               வில்லுடன் வேடர் 



b2e0af8de0aeb2e0af88_kancanakullai.jpg" width="300" />


என் காதலன் சென்ற வழியானது எறும்பின் புற்றுபோன்ற சிறிய சுனைகளையும் ,உலைக்கல் போன்ற வெப்பமுடையபாறைகளை ஏறியும்,கூர்மையான வில்லை உடைய வேடர்கள் தன்அம்புகளை கூர் தீட்டுவதுமான கொடுமையான வழியாகும்.அதை நினைத்து கவலை கொள்ளாமல் என்னை இகழ்கிறது இந்த ஊர்.



ரொம்ப வ ருத்தமா இருக்காங்க தலைவி,அதை பாத்த பிரண்டு கவலைபடாதேன்னு ஆறுதல் சொல்லுறாங்க.அதுக்கு தலைவி சொல்லுறாங்க என் வீட்டுகாரர் பிரிந்ததபத்தி கவலை படல ,அவர் போன வழிதான் கஷ்டமானது அப்படின்னு சொல்லுறாங்க 


                                                  நீர் சுனை 






11. பாலை - தலைவி கூற்று

கோடீர் இலங்குவளை ஞெகிழ நாடொறும்
பாடில கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கே
எழுவினி வாழியென் னெஞ்சே முனாஅது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே. 
-மாமூலனார்

கோடு-சங்கு,ஈர் இலங்கு-அறுத்து செய்யப்பட்ட,வளை நெகிழ -வளையல் கையில் இருந்து நழுவுதல்,கலி இழும் -கலங்கி அழுவுதல்,ஈங்கு-இங்கு,உறைதல்-இந்த இடத்தில் இருத்தல்,உய்குவம்-தப்பிப்போம்,எழுவினி =எழு+இனி ,முன்று-முற்படு,குல்லை-கஞ்சகுல்லை எனும் செடி,வடுகர்-வேங்கடத்தின் வடக்கில் வாழும் வேடர்கள்,கட்டி-கங்க நாடு,மொழி பெயர்-வேற்று மொழி,வழிபடல் சூழ்ந்து-அவர் இருக்கும் இடம் செல்ல நினைத்தல்


                                           கஞ்சன்கொல்லை பூ 


சங்கு அறுத்து செய்யப்பட்ட வளையல் கையில் இருந்து நழுவுகிறது.நாள்தோறும் கண்மூடாமல் கலங்கி அழும் கண்ணோடு இப்படி இங்கே இருப்பதில் இருந்து தப்பிப்போம்.எழுவாய்!என் நெஞ்சே!கஞ்ச குல்லையை தலைமாலையை உடைய வடுகருடைய இடமான,பல வேலைகள் உடைய கட்டி என்பவனுடைய நல்ல நாட்டிற்கு அப்புறத்தில் உள்ள ,மொழி வேறாக இருந்தாலும் அவனை நாடி செல்வோம்.
என் காதலன் இல்லாத இந்த இடத்தில் இருந்து அழுவதை விட ,வேற மொழி பேசுற இடத்தில் இருக்கிற அவனை அடையலாம் என்று தன் தோழியிடம் கூறுகிறாள் தலைவி 

கருத்துகள் இல்லை: