ஞாயிறு, 1 மே, 2011

குறுந்தொகை பாடல்-5

                                                                நாரை

5. நெய்தல் - தலைவி கூற்று

அதுகொல் தோழி காம நோயே
வதிகுரு குறங்கும் இன்னிழற் புன்னை
உடைதிரைத் திவலை அரும்புந் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே. 
-நரிவெரூ உத்தலையார்.

வதி குருகு-மருத நிலத்திலிருந்து நெய்தல் நிலத்தில் தன் துணையை பிரிந்து தங்கும் நாரை,தீநீர்-இனிய நீர்,மெல்லம் புலம்பன் -மெல்லிய கடற்கரையை உடைய தலைவன் ,உண்கண் -தாமரை,உண்ணுகிற கண் ,பாட ஒல்ல -மூட முடியாத 


தோழியே! இதுதான் காதல் என்பதோ!தன துணையை விட்டு பிரிந்து தங்குவதற்கு ஏற்ற இனிய நிழலை உடைய புன்னை மரம் உள்ளது .ஆனால் அதன் அருகிலேயே கரையை உடைக்கிற அலையை உடைய நீர்த்திவலையால்,உண்ணுகிற தன்மை உடைய பல இதழ்களை உடைய தாமரை பூ பூத்து இருக்கிறது,அது போன்ற என் கண்கள் ,மெல்லிய கடற்கரையை உடைய என் தலைவன் பிரிந்ததால் ,என் கண்கள் மூட மறுக்கிறதே


                                      புன்னை பூ,காய்  


                                                   
                                                               தாமரை பூ 



கருத்துகள் இல்லை: