வெள்ளி, 17 ஜூன், 2011

குறுந்தொகை பாடல் -19,20,21






21. முல்லை - தலைவி கூற்று


வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றை
கானங் காரெனக் கூறினும்
யானோ தேரேன் அவர் பொய்வழங் கலரே. 
-ஓதலாந்தையார்.
                                        கொன்றைப் பூ


வண்டுபட-வண்டுகள் மொய்க்க,தைந்த-செறிந்து மலர்ந்த ,இடை இடுபு-தழைகளுடன் சேர்த்து கட்டிய,பொன்செய் புனை இழை-பொன்னால் செய்து அணிவது போன்ற தலை அணிகள்,கதுப்பு-கூந்தல்,கொன்றை கானம்-கொன்றை மரக்காடுகள்,தேரன்-நம்ப மாட்டேன்
                                     கொன்றை மரம்


வண்டுகள் ரீங்காரமிட்டு மொய்க்க நிறைய பூங்கொத்துகளை தழைகளுடன் வைத்து கட்டி பொன்னால் செய்தது போன்ற தலை அணிகளை சூடியிருக்கும் மகளிரின் கூந்தல் போன்று தோன்றும் புதியதாக பூத்துள்ள கொன்றை மரக்காடுகள் இது கார்காலம் என்று கூறினாலும் ,நான் நம்ப மாட்டேன்.ஏனென்றால் என் தலைவனாகிய காதலன் ஒருபோதும் பொய் சொல்லமாட்டான் 

இவளோட வீட்டுக்காரன் மழைக்காலத்தில் வந்து விடுகிறேன் ன்னு சொல்லிட்டு போனானே ,இன்னும் வரலேயேன்னு தோழி கவலை படுறா..அதை அறிந்த தலைவி தோழி கவலை படாதே,நான் கொன்றை பூ பூத்ததால் கார் காலம் வந்துட்டு அப்படின்னு கவலை படமாட்டேன்.இன்னும் கார்காலம் வரல.ஏன்னா என் வீட்டுக்காரன் பொய் சொல்ல மாட்டான் 
பாடல் 20. பாலை - தலைவி கூற்று

அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே. 
-கோப்பெருஞ்சோழன்

உரவோர்-அறிவுடையோர் ,மடவம்-அறியாமை 

அருளையும்(தொடர்பு இல்லாதவர்களிடம் உண்டாகும் அன்பு)அன்பையும் (உறவினர்களிடம் உண்டாகும் அன்பு) தவிர்த்து தன்னுடைய துணையை விட்டு பொருளுக்காக பிரிவோர் அறிவுடையோர் என்றால் ,அத்தகைய அறிவுடையோர் அறிஞர்களாகவே இருக்கட்டும்.தோழியே!நாம் அறிவிலிகளாகவே இருப்போம் 

"இப்படி நம்மளை விட்டுவிட்டு போய்விட்டாரே" என்று தோழி சொன்னாள்.அதை கேட்ட தலைவி உள்ள வேதனை தாங்காமல் இப்படி சொல்கிறாள்


பாடல் -19
                                                     முல்லை பூ


19. மருதம் - தலைவன் கூற்று

எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்
பூவில் வறுந்தலை போலப் புல்லென்
றினைமதி வாழியர் நெஞ்சே மனைமரத்
தெல்லுறு மௌவல் நாறும்
பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே. 
-பரணர்.

எவ்வி-எவ்வி எனும் மன்னன(வள்ளல்),பூ இல் வறுந்தலை-பூவை சூடாத தலை,புல்லென்று -பொலிவிழந்து,இனைமதி-வருந்து,மனை மரத்து-வீட்டு தோட்டத்து மரத்து,எல்லுறும்-ஒளிவீசும்,

எவ்வி என்ற மன்னனை இழந்த பாணர்கள் பூவை சூடாமல் வெற்று தலையுடன் இருந்ததை போல வருந்துவாய் மனமே!தோட்டத்து மரத்தில் படர்ந்து பூத்திருக்கும் இரவு நேரத்து முல்லை பூவின் மணத்தை போன்ற கூந்தலை உடைய இவள் யாரோ நமக்கு?



ஒன்னும் இல்லங்க ,வீட்டுல புருசன் பொண்டாட்டி சண்டை.அதான் நம்ம தலைவரு பீல் பண்றாரு .எப்படியாவது சமாதான படுத்தியாவணும்.மனசுக்குள்ளேயே பேசிக்கிற மாதிரி சொல்லுறார்,பாணருகெல்லாம் யாரும் இல்லாத மாதிரி ,இவள விட்டா எனக்கு வேற யாரு இருக்காங்க.அப்படியே சொல்லும் போது லேசா ஐஸ் வேற"சாயங்காலம் பூத்திருக்கிற மல்லிகை பூ போல வாசமுற்ற கூந்தல் உடைய என் பொண்டாட்டி ,நமக்கு என்ன சொந்தமோ?" அப்படின்றாரு.ரொம்ப பீல் பண்றாரோ?

சனி, 11 ஜூன், 2011

குறுந்தொகை பாடல் -17,18






18. குறிஞ்சி - தோழி கூற்று

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே. 
-கபிலர்.
                                                வேர்பலா



வேரல்-மூங்கில்,செவ்வி-தலைவி,காதலி,சிறு கோட்டு-சிறிய காம்பு,



மூங்கிலை வேலியாக உடைய வேர்பலாவினை உடைய சாரல் நாட்டு தலைவனே,இவளை திருமணம் செய்து உனக்கு உடையவளாக ஆக்குக!
யார் அறிவாரோ!இவள் நிலையை,சிறிய காம்பை உடைய பெரிய பலா பழமானது எந்த தாங்குதலும் இல்லாமல் தொங்குவது போல இவளின் உயிரோ மிக சிறியது.இவள் கொண்ட காதலோ மிக பெரியது


                                             சிறுகோட்டு பலா

 

மலைபக்கத்து சிறிய கொம்பிலே தோன்றும் பலா நாளுக்குநாள் பருத்து முதிர்ந்து வரும்.உரிய காலத்தில் பறித்து உண்ணுவோர் இல்லாதபோது கொம்பை ஒடித்து தானும் வீழ்ந்து சிதையும்.அதுபோல,இவளிடம் தோன்றி வளரும் காமம் கனியும் இவளை குறித்த காலத்தில் மனம் கொள்ளாதபோது இவள் காமமும் அதை தாங்கிய அவளது உயிரும் சிதையும் ,எனவே சீக்கிரம் இவளை திருமணம் செய்வாக என்பதாகும் 

உள்ளுறை உவமம் 
தலைவனும் தலைவியும் களவு இன்பம் பயப்பது ,பிறர் வேலிக்குள்ளே உள்ள பலாவை அவர் அறியாமலே உண்டது போன்றது.எனவே அவளை ஊர் அறிய திருமணம் செய்வதால் .அவளோடு இல்லறம் பேணி இன்புறுதல் முற்றத்து பலாவை உண்பது போன்றது ,

நம்ப பிள்ளைங்க ரெண்டு பேரும் யாருக்கும் தெரியாம காதல் இன்பம் பண்றாங்க.இதை பாத்த தோழி பொண்ணு இப்படி செய்யாதீங்க .சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லா வாழுங்க.அப்படின்னு சொல்லுறாங்க 

17. குறிஞ்சி - தலைவன் கூற்று

மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ் கொளினே. 
-பேரெயின் முறுவலார்.


                                                குதிரை


மா-குதிரை ,மடல்-பனை மடல்,எருக்கங்கண்ணி-எருக்கம் மாலை,மறுகின்-ஊர் தெருவில்,ஆர்க்க-சிரிக்க பிறிதும் ஆகுதல்-உயிர் விடல்

ஓடும் குதிரை என ஓடாத பனைமடல் குதிரையில் ஏறுவர், சூடக்கூடிய மாலை என மலராத மொட்டு எருக்கமாலையை சூடுவார்,அப்படியே வீதியில் தோன்றி பிறரால் நகைக்கபடுவர்,அப்படியும் வெற்றி ஆகாதபோது சாகவும் துணிவர் ,காதல் நோய் கொண்டவர்கள் 

                                       எருக்கம் பூ

நம்ம பையன் பொண்ணோட தோழிகிட்ட உதவி கேட்டாரு லவ்வர பாக்க,ஆன அவங்க உதவி பண்ண முடியாதுன்னாங்க,என்னால மேல சொன்ன மாதிரி செய்து என் ஆள பாக்க முடியும்,அப்படியே முடியலன்னா சாகவும் முடியும் அப்படின்கிறான் .




திங்கள், 6 ஜூன், 2011

குறுந்தொகை பாடல் -15,16







16. பாலை - தோழி கூற்று

உள்ளார் கொல்லோ- தோழி! கள்வர்
பொன்புனை பகழி செப்பங் கொண்மார் ,
உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்
செங்காற் பல்லி தன்றுணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடிறந் தாரே.



                                    சுவர் பல்லி

 
-பாலைபாடிய பெருங்கடுங்கோ.

உள்ளார் கொல்லோ-நம்மை உடையவன் நினைப்பானோ ,பொன்புனை பகழி-இரும்பால்செய்யப்பட்ட அம்பு ,செப்பம்-சோதனை நோக்கில் ,உகிர் நுதி -விரல் நகம்,புரட்டும்-நெருடி பார்க்கும்,பயிரும்-அழைக்கும் ,கள்ளியங்காடு-கள்ளி செடி நிறைந்த காடு




                                      கள்ளிக்காடு


நம்மை நினைக்காமல் இருப்பாரோ தோழி!ஆறலை கள்வர்கள்(பாலை நிலதிருடர்கள்/வழிப்பறி செய்வோர்)இரும்பால் செய்யப்பட்ட அம்புகளை சோதனை செய்யும் நோக்கில் தன் விரல்களால் நெருடி பார்ப்பார்கள்.அப்போது எழும் ஓசையானது செங்கால்களை உடைய பல்லியானது தன் துணையை அழைக்க எழுப்பும் ஓசை போன்று இருக்கும்.அழகிய கால்களை உடைய கள்ளிக்காட்டை கடந்து நம் தலைவன் செல்லும் போது.

தலைவன் பொருள் தேட வெளியே போய்ட்டாரு,எப்படின்னா இப்ப நம்ம ஊர்ல கல்யாணம் பண்ணிட்டு மனைவிய பிரிஞ்சி வெளிநாடு போறாங்க பாருங்க,அது மாதிரி.பிரிவு தாங்காம தலைவி ரொம்ப வருத்த படுறா.ஆறுதல்காக தோழி இப்படி சொல்லுறா  

15. பாலை - செவிலி கூற்று
பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே. 
-ஔவையார்
                             பறை                        


.

           
                           
















பறைபட-மேளம் ஒலிக்க,பணிலம் ஆர்ப்ப-சங்கு ஓசை எழ ,இறை கொள்பு-திருமணம் புரிதல் ,பொது இல் -பொது இடம்,ஆய்கழல் -அழகிய கழல்,சேயிலை-செம்மையான இலை(பசுமையான இலை),வெல்வேல்-வெள்ளி வேல்,தொகு வலை-நிறைய வளையல்,மடந்தை-பேதை பெண் 

பறை ஓசை எழ,சங்கு ஒலிக்க திருமணம் நடந்தது,பழைய ஆலமரத்தின் அடியில் உள்ள பொது இடத்தில நாலூர் கோசர்கள் சொல்லிய வாக்கு போல ,அழகிய கழலையும் அணிந்த,செம்மையான ,வெள்ளிவேலை உடைய விடலை பையனோடு சென்ற ,நிறைய வளையலை அணிந்த முன்கையை உடைய நமது பேதைபெண்ணின் நட்பு உண்மையானது.


நாலூர் கோசர் நன்மொழி-வரலாற்று செய்தி 
மோகூர் பழையனுக்கு படைஉதவி வருவதாக தாம் சொன்ன சொல் தவறாமல் கோசர்கள் உதவி செய்தனர் .தென்னாற்காடு மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் மோகூர் ,ஆலம்பலம்,கோசர்பாடி ஆகிய இடங்கள் உள்ளன.




நம்ம பொண்ணு பையனோடு யாருக்கும் தெரியாம போய்ட்டா.பொண்ணோட அம்மா ரொம்ப வருதப்படுறா,என்ன ஆச்சோ ஏது ஆச்சுன்னு .செவிலி தாய் சொல்லுறா,"ஒன்னும்,வருத்த படாத,உன் பொண்ணுக்கு அந்த பையனோட ஊர்ல நல்லபடியா கல்யாணம் ஆய்டுச்சு,அவ பண்ணுன காதல் கோசர்கள் செய்த சத்தியம் போல உண்மையானதுதான் "அப்படின்னு      


                                                    ஆலமரம்  

தமிழர் திருமணம் காணொளி 

சனி, 4 ஜூன், 2011

குறுந்தொகை பாடல் -13,14







14. குறிஞ்சி - தலைவன் கூற்று

அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்த
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம, யானே! பெற்றாங்
கறிகதில் ,அம்மவிவ் வூரே! மறுகில்
"நல்லோள் கணவன் இவன்" எனப்
பல்லோர் கூற,யாம் நாணுகஞ் சிறிதே. 
-தொல்கபிலர்.

வார்ந்திலங்கு -நேராக இருக்கிற ,வையெயிற்று -கூர்மையான பற்கள்,சின்மொழி-சில மொழி(கொஞ்சமான பேச்சு),அரிவை -பெண்(காதலி),மறுகில் -மடல் ஏறுதல்,


                                                



அமிழ்ததின் இனிமை நிரம்பிய அவளின் செந்நாக்கு அவளின் வாயில் கூர்மையாக முளைத்த பற்களை பார்த்து பயப்படும் .அதனால் கொஞ்சமாகவே பேசுபவள்.அவளை அவள் ஊரில் தெருவில் மடல் ஏறி பெறுவேன்.பிறகு இந்த நல்லவளின் கணவன் இவன் என்று சொல்வார்கள்.அப்போது நாங்கள் சிறிது வெட்கமடைவோம்

நம்ம ஆளு லவ்வரோட பிரண்டுகிட்ட சொல்லுறாரு "கொஞ்சம் என் ஆள கூப்பிட்டு வா "கொஞ்சம் பேசணும் ,அப்படின்னாரு.ஆனா இந்த வால் புடிச்சி முடியாதுன்னு சொல்லுது.அதனால கோவப்பட்ட தலைவன் நீ கூப்பிடலன்னா நான் அவளை மடல் ஏறி கல்யாணம் பண்ணிகொள்வேன் .என்ன இவன்தான் இந்த நல்லவளின் கணவன் என்று சொல்ல்வார்கள்.அப்போது நானும் அவளும் கொஞ்சம் வெட்கபப்டுவோம் ,அவ்வளவுதான் !


13. குறிஞ்சி - தலைவி கூற்று

மாசறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகற்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய்தந் தனனே- தோழி !
பயலை ஆர்ந்தன குவளையங் கண்ணே. 
-கபிலர்.


மாசற-அழுக்கு இல்லாமல் ,பெயல்-மழை,உழந்த-தாக்கப்பட்ட,
           இரும்பிணர் துறுகல்-சொரசொரப்பானஉருண்டையான
           கல் , 





சுத்தமாக குளிப்பாட்டப்பட்ட யானை போன்று மழையால் குளிப்பாட்டப்பட உருண்டையான சொரசொரப்பான கல் இருந்தது.அந்த கல்லின் குளிர்ச்சியான ஒரு புறத்தே நானும் அவனும் கூடி இருந்தோம்.அவன் என்னை பிரிந்ததால் எனக்கு இந்த நோயை தந்தான்.அதனால் குவளை போன்ற என் கண்கள் பசலை நோயை பெற்றது 





நம்ம பையனும் பொண்ணும் லவ் பண்ணுனாங்க,எங்கன்னா அந்த பெரிய கல்லுக்கு பின்னாடி.ரொம்ப ஜாலிய இருந்தாங்க ,பையன் பிரிஞ்சிட்டாரு.அந்த பிரிவ தாங்காத பொண்ணுதான் இப்படி தன்னோட பிரண்ட்டுகிட்ட சொல்லிட்டு இருக்கா