சனி, 4 ஜூன், 2011

குறுந்தொகை பாடல் -13,14







14. குறிஞ்சி - தலைவன் கூற்று

அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்த
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம, யானே! பெற்றாங்
கறிகதில் ,அம்மவிவ் வூரே! மறுகில்
"நல்லோள் கணவன் இவன்" எனப்
பல்லோர் கூற,யாம் நாணுகஞ் சிறிதே. 
-தொல்கபிலர்.

வார்ந்திலங்கு -நேராக இருக்கிற ,வையெயிற்று -கூர்மையான பற்கள்,சின்மொழி-சில மொழி(கொஞ்சமான பேச்சு),அரிவை -பெண்(காதலி),மறுகில் -மடல் ஏறுதல்,


                                                



அமிழ்ததின் இனிமை நிரம்பிய அவளின் செந்நாக்கு அவளின் வாயில் கூர்மையாக முளைத்த பற்களை பார்த்து பயப்படும் .அதனால் கொஞ்சமாகவே பேசுபவள்.அவளை அவள் ஊரில் தெருவில் மடல் ஏறி பெறுவேன்.பிறகு இந்த நல்லவளின் கணவன் இவன் என்று சொல்வார்கள்.அப்போது நாங்கள் சிறிது வெட்கமடைவோம்

நம்ம ஆளு லவ்வரோட பிரண்டுகிட்ட சொல்லுறாரு "கொஞ்சம் என் ஆள கூப்பிட்டு வா "கொஞ்சம் பேசணும் ,அப்படின்னாரு.ஆனா இந்த வால் புடிச்சி முடியாதுன்னு சொல்லுது.அதனால கோவப்பட்ட தலைவன் நீ கூப்பிடலன்னா நான் அவளை மடல் ஏறி கல்யாணம் பண்ணிகொள்வேன் .என்ன இவன்தான் இந்த நல்லவளின் கணவன் என்று சொல்ல்வார்கள்.அப்போது நானும் அவளும் கொஞ்சம் வெட்கபப்டுவோம் ,அவ்வளவுதான் !


13. குறிஞ்சி - தலைவி கூற்று

மாசறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகற்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய்தந் தனனே- தோழி !
பயலை ஆர்ந்தன குவளையங் கண்ணே. 
-கபிலர்.


மாசற-அழுக்கு இல்லாமல் ,பெயல்-மழை,உழந்த-தாக்கப்பட்ட,
           இரும்பிணர் துறுகல்-சொரசொரப்பானஉருண்டையான
           கல் , 





சுத்தமாக குளிப்பாட்டப்பட்ட யானை போன்று மழையால் குளிப்பாட்டப்பட உருண்டையான சொரசொரப்பான கல் இருந்தது.அந்த கல்லின் குளிர்ச்சியான ஒரு புறத்தே நானும் அவனும் கூடி இருந்தோம்.அவன் என்னை பிரிந்ததால் எனக்கு இந்த நோயை தந்தான்.அதனால் குவளை போன்ற என் கண்கள் பசலை நோயை பெற்றது 





நம்ம பையனும் பொண்ணும் லவ் பண்ணுனாங்க,எங்கன்னா அந்த பெரிய கல்லுக்கு பின்னாடி.ரொம்ப ஜாலிய இருந்தாங்க ,பையன் பிரிஞ்சிட்டாரு.அந்த பிரிவ தாங்காத பொண்ணுதான் இப்படி தன்னோட பிரண்ட்டுகிட்ட சொல்லிட்டு இருக்கா 




கருத்துகள் இல்லை: