வெள்ளி, 29 ஏப்ரல், 2011

குறுந்தொகை பாடல் 3



குறுஞ்சி பூ 



3. குறிஞ்சி - தலைவி கூற்று

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. 
-தேவகுலத்தா

தேவகுலம்-கோவில்,நீர்-கடல்,கருங்கோல்-கருமை நிறம் உடைய குறிஞ்சி பூவினுடைய காம்பு ,நாடன்-குறிஞ்சி நாட்டின் தலைவன் 
ஆரள்-ஆழம்

நம்ம பொண்ணு திருட்டுதனமா காதல் பண்றாங்க .அதை பார்த்த தோழி இப்படி திருட்டுதனமா பண்ணாத,அவன் லவ் பண்றன்னு ஏமாத்திட்டு போய்டுவான் அப்படின்னு திட்டுறாங்க.நம்ம பசங்களுக்கு அப்ப என்ன சொன்னாலும் ஏறாது .என்ன சொல்லுது பாருங்க 

எங்க காதல் நிலத்தை விட பெரிது,வானத்தை விட உயர்ந்தது ,கடலை விட ஆழமானது .கறுப்புநிற கொம்புல பூத்திருக்கின்ற குறிஞ்சி பூவில் உள்ள தேனை மட்டுமே சேகரிக்கும் என் தலைவன் நாட்டு தேன் ஈக்கள்
அதனால என் ஆளும் என்ன மட்டும் தான் காதல் பண்ணுவான்.நீ ஒன்னும் எனக்கு  அறிவுரை சொல்ல வேண்டாம் 

கருத்துகள் இல்லை: