வியாழன், 21 ஏப்ரல், 2011

குறுந்தொகை பாடல் 1

குறுந்தொகை பாடல் 1

திணை -குறிஞ்சி ,இடம்-மழையும் மலை சார்ந்த இடமும் ,காலம்-கூதிர் ,பொழுது-யாமம் ,கடவுள்-முருகன்-தினை,நெல் விலங்கு-யானை,புலி,பன்றி,கரடி,  பறவை-மெயில்,கிளி, மரம-வேங்கை,கோங்கு பறை-வெறியாட்டு பறை ,தொண்டக பறை , தொழில்-தேன் எடுத்தல் ,பண்-குறிஞ்சி பண்,பூ-காந்தள்,வேங்கை,குறிஞ்சி ,நீர்-சுனை நீர்,அருவி நீர் ,உரிபொருள்-புணர்தலும் புணர்தல் நிமித்தமும் 

காந்தள்,கர்ர்திகை,கண்வள்ளி பூ 




1. குறிஞ்சி - தோழி கூற்று

செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே. 
-திப்புத் தோளார்.

செங்களம்-போரினால் போர்க்களம் இரத்ததால் சிவப்புபாக உள்ளது ,தோய்ந்த-கறைபட்ட .கோட்டி-தந்தம்,கொம்பு ,கழல் -தண்டை ,கால் வளையம் ,


இரத்த போர் களத்தையும்,இரத்த கறைபட்ட அம்பினையும் ,பகைவர்களை  குத்தி கொன்றதால் இரத்த கறைபட்ட  தந்தங்களை கொண்ட யானைகளையும் ,காலில் வீர கழல்கலையும் அணிந்த முருகனது குன்றம் .மேலும் இரத்தம் போன்ற நிறைந்த காந்தள் பூ குலைகளை கொண்டது


நம்ம பசங்க இப்ப ரோஜாபூ கொடுத்து ஐ லவ் யூ சொல்லற மாதிரி அந்த காலத்துல நம்ம ஆளு கார்த்திகை பூ ஒன்னு மட்டும்  கொடுத்து இருக்காரு,அதுவும் நேரா கொடுக்காம ஆளோட பிரண்ட்கிட்ட குடுத்து கொடுக்க சொல்றாரு .ஆனா அந்த வால்புடிச்சி சொல்லுது(மேலே உள்ள உரையை சேர்த்து கொள்ளவும்). எங்க ஊரே சிவப்பு கலர்தான் .இந்த ஒரு பூ எதுக்கு