செவ்வாய், 26 ஏப்ரல், 2011

குறுந்தொகை பாடல் 2




2. குறிஞ்சி - தலைவன் கூற்று

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே. 
-இறையனார்.

கொங்கு -தேன்
தேர் ------தேடுதல் 
அஞ்சிறைத்தும்பி-உடலோடு சிறகை உடைய வண்டு 
காமம் செப்பாது -முக நட்பபிற்காக சொல்லாது 
மொழி-சொல்லு 
பயிலியது -பயின்றது 
கெழிய-உரிமை உடைய 
மயிலியல் -மயில் போன்ற 
செரியெயிற்று --வரிசையான பற்களை உடைய 
அரிவை-பெண் 
நறிய-மிகுந்த மணம் உடைய  

இந்த பாட்டு எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குதா.நம்ம சிவாஜி பாட்டு எழுதி கொடுப்பாரு பாருங்க நம்ம நாகேஷ்க்கு திருவிளையாடல் படத்துல.அந்த பாட்டு தாங்க .

அதாவது காதல் பண்றவங்களுக்கு தன்னோட காதலி மட்டுமே உயர்ந்தவளாக தெரியும்.அப்படித்தான் அவரோட காதலியோட கூந்தல் மணத்தை விட எந்த பூவிலாவது அதிக மணம் உள்ளதா என கேட்கிறார் 


தேனை தேடி வாழ்கைநடத்துகிற வண்டே!எனது முகத்தை பார்தத்ற்காக சொல்லாதே .கண்டதை மட்டும் சொல்லு .என்னோடு பயிலகூடிய நட்பையும் உரிமையும் ,வரிசையான பற்களையும் உடைய இந்த பெண்ணின் கூந்தலின் மணத்தை விட அதிகம் உள்ள பூக்களை எங்கேயும் பார்த்ததுண்டோ ?

கருத்துகள் இல்லை: