புதன், 20 ஏப்ரல், 2011

குறுந்தொகை 
குறுந்தொகை எட்டு தொகை நூல்களில் ஒன்று .கவிதை தோன்றிய காலத்தில் புலவர்கள் சிறுசிறு வரிகளால் எழுதினர் .அப்படி பாடப்பட்ட பாடல்கள் இரண்டாயிரத்து நானூற்று இருபத்து ஆறு (2426).அவைதான் எட்டு தொகை நூல்கள்.அவை பொருளையும் பா வகையும் அடி அளவையும் கொண்டு நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு,அகநானூறு,புறநானூறு ,பதிற்றுப்பத்து.பரிபாடல் ,கலித்தொகை ஆகும்

நான்கடி முதல் எட்டு அடிவரை உடையது, குறுந்தொகை 205 புலவர்களால் பாடப்பட்டது .தொகுத்தவர் உப்ப்பூரி குடி கிழார் ,மொத்தம் 401 பாடல்கள் குறுந்தொகையில் உள்ளது.

குறுந்தொகையில் உள்ள பாடல்கள் அனைத்திற்கும் இந்த வலை பூவில் விளக்கத்துடன எழுதலாம் என்று  தமிழ் காதலுடன் உள்ளேன்.தவறுகள் இருந்தால் தமிழ் பெரியோர்கள் மன்னித்து தவறுகளை சுட்டி காட்டவும்  

கருத்துகள் இல்லை: