அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்த
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம, யானே! பெற்றாங்
கறிகதில் ,அம்மவிவ் வூரே! மறுகில்
"நல்லோள் கணவன் இவன்" எனப்
பல்லோர் கூற,யாம் நாணுகஞ் சிறிதே.
மாசறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகற்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய்தந் தனனே- தோழி !
பயலை ஆர்ந்தன குவளையங் கண்ணே.
மாசற-அழுக்கு இல்லாமல் ,பெயல்-மழை,உழந்த-தாக்கப்பட்ட,
சுத்தமாக குளிப்பாட்டப்பட்ட யானை போன்று மழையால் குளிப்பாட்டப்பட உருண்டையான சொரசொரப்பான கல் இருந்தது.அந்த கல்லின் குளிர்ச்சியான ஒரு புறத்தே நானும் அவனும் கூடி இருந்தோம்.அவன் என்னை பிரிந்ததால் எனக்கு இந்த நோயை தந்தான்.அதனால் குவளை போன்ற என் கண்கள் பசலை நோயை பெற்றது
நம்ம பையனும் பொண்ணும் லவ் பண்ணுனாங்க,எங்கன்னா அந்த பெரிய கல்லுக்கு பின்னாடி.ரொம்ப ஜாலிய இருந்தாங்க ,பையன் பிரிஞ்சிட்டாரு.அந்த பிரிவ தாங்காத பொண்ணுதான் இப்படி தன்னோட பிரண்ட்டுகிட்ட சொல்லிட்டு இருக்கா


