உள்ளார் கொல்லோ- தோழி! கள்வர்
பொன்புனை பகழி செப்பங் கொண்மார் ,
உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்
செங்காற் பல்லி தன்றுணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடிறந் தாரே.
சுவர் பல்லி
கள்ளிக்காடு
நம்மை நினைக்காமல் இருப்பாரோ தோழி!ஆறலை கள்வர்கள்(பாலை நிலதிருடர்கள்/வழிப்பறி செய்வோர்)இரும்பால் செய்யப்பட்ட அம்புகளை சோதனை செய்யும் நோக்கில் தன் விரல்களால் நெருடி பார்ப்பார்கள்.அப்போது எழும் ஓசையானது செங்கால்களை உடைய பல்லியானது தன் துணையை அழைக்க எழுப்பும் ஓசை போன்று இருக்கும்.அழகிய கால்களை உடைய கள்ளிக்காட்டை கடந்து நம் தலைவன் செல்லும் போது.
பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.
பறை
.

பறைபட-மேளம் ஒலிக்க,பணிலம் ஆர்ப்ப-சங்கு ஓசை எழ ,இறை கொள்பு-திருமணம் புரிதல் ,பொது இல் -பொது இடம்,ஆய்கழல் -அழகிய கழல்,சேயிலை-செம்மையான இலை(பசுமையான இலை),வெல்வேல்-வெள்ளி வேல்,தொகு வலை-நிறைய வளையல்,மடந்தை-பேதை பெண்
நாலூர் கோசர் நன்மொழி-வரலாற்று செய்தி
ஆலமரம்
தமிழர் திருமணம் காணொளி





